அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு இன்று துவக்கம்

x

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இதில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலாவது பொது கலந்தாய்வு வருகிற ஒன்றாம் தேதி முதல் 10 வரையும், 2வது பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20ம் தேதி வரையும் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்