"குழந்தை தனக்கு பிறக்கவில்லை"... வழக்கறிஞரான மனைவியை டார்ச்சர் செய்த காதல் கணவன் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

x

திருவள்ளூரில், கணவர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தண்டலத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

இவர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றெடுத்த‌தாகவும், ஆனால், குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கணவர் துன்புறுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உதவி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், தன்னை ஏமாற்றி 3 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், அதனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்