ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு..குற்றவாளியை காவலில் எடுத்த என்ஐஏ அதிகாரிகள்

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாருக் சைய்பி என் ஐ ஏ காவலில் விடப்பட்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில்,

ஷாருக்கான் சைய்ஃபி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக் சைஃபி என் ஐ ஏ காவலில் விடப்பட்டார். வரும் எட்டாம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கேரளா போலீசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்