விசாரணை கைதிக்கு செல்போன் வழங்கிய விவகாரம்...2 காவலர்கள் சஸ்பெண்ட் | Madurai | TNPolice

x

மதுரையில், விசாரணைக் கைதிக்கு செல்போன் வழங்கிய விவகாரத்தில், காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த திமுக நிர்வாகியான புகழ் இந்திரா என்பவர், OLX மற்றும் தரகர்கள் மூலம், ஒரே வீட்டை 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, விசாரணை கைதியை செல்போனில் பேச வைத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இதையடுத்து, பணியின்போது அலட்சியமாக இருந்த காவலர்கள் அய்யனன், சுரேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்