அமைச்சர் கீதாஜீவனை கடுமையாக விமர்சித்த சசிகலா புஷ்பா மீது பாய்ந்த வழக்கு

x

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டை அடித்து நொறுக்கியது தொடர்பாக, திமுக கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டை, அவர் இல்லாத நேரத்தில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்துவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் சசிகலா புஷ்பா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திமுக கவுன்சிலர்கள் அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், இசக்கிராஜ் திமுகவைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட மொத்தம்13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்து பேசியது தொடர்பாக 3-பிரிவுகளில் சசிகலா புஷ்பா மீது வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்