மாமியார் வீட்டுக்கு சென்ற ரவுடிக்கு நேர்ந்த கொடூரம் - பட்டப்பகலில் வீடு புகுந்த கும்பல்

x

செங்கல்பட்டு அருகே, பிரபல ரவுடி, தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வைகோ என்கிற சந்துரு. தாம்பரம் பகுதியின் பிரபல ரவுடியான லெனினின் கூட்டாளியாக இருந்து வந்தார். வினிதா என்ற பெண்ணுடன் சந்துருவுக்கு திருமணம் ஆன நிலையில், குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக, கூடுவாஞ்சேரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சந்துரு சென்றுள்ளார். சந்துரு மீது முன்விரோதத்தில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல், தகவலின் பேரில் அவரை பின் தொடர்ந்துள்ளது. மாமியார் வீட்டில் இருந்த சந்துருவை, அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அப்போது தடுக்க மனைவி வினிதாவும் அரிவாளால் தாக்கப்பட்டார். இதில், முகம் சிதைந்த நிலையில், சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவ செய்த போலீசார், 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சந்துரு மீது, கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 18 வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்