தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர மகன்...அடுத்து செய்த பயங்கரம் | Kerala | Mom | Son

x

கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பாலப்புரத்தை சேர்ந்த சரஸ்வதியம்மா மற்றும் அவரது மூத்த மகன் விஜயகிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக விஜயகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சரஸ்வதியம்மாவின் இளைய மகன் வீட்டிற்கு வந்தபோது, தாய் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகவும், விஜயகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்