6 வயது மகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற கொடூர தந்தை..குடிபோதையில் வெறிச்செயல்

x

ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு திருமணமாகி 6 வயதில் நக்ஷத்ரா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில், இவரது மனைவி 2 வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தனது தாயின் அரவணைப்பில் மகளை வளர்த்து வந்த மகேஷ், சம்பவத்தன்று மதுபோதையில் மகளை அரிவாளால் வெட்டி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, தட்டிக்கேட்ட அவரின் தாயாரையும் அவர் கத்தியால் தாக்கிய நிலையில், மகேஷை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மகேஷ் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்