நெருப்பு வளையத்துக்குள் சீறி பாய்ந்த சிறுவர்கள் - பிரமித்து பார்த்த அமைச்சர்

x

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 55ஆவது ஆண்டு தொடக்க தின விழா அங்குள்ள வளாகத்தில் நடைபெற்றது.

உணவுத் திருவிழா, விளையாட்டு போட்டிகள், சி.ஆர்.பி.எப் வீர‌ர்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வீர‌ர்களின் ஆணழகன் போட்டி, கராத்தே போட்டி போன்றவையும் நடைபெற்றது.

விழாவில், பால் வளத்துறை அமைச்சர் நாசர், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டி.ஐ.ஜி எம்.தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்