8வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி..கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது விபரீதம்

x

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வளாகத்தில் 3ம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வடமாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர், அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை இரவும் பகலுமாக செய்து வருகின்றனர். இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ரபியூல் ஹக்கீ, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளான். பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அணியாமல், கட்டிட வேலை மேற்கொண்டபோது, 8வது தளத்திலிருந்து சிறுவன் தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலின் பெயரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்