காட்டுப்பகுதிக்குள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கல்லூரி மாணவரின் உடல்... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காட்டில் இருந்து கல்லூரி மாணவர்அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமல்லபுரம் மணமை காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில், ஆண்சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற மாமல்லபுரம் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த மாணவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கண்டுநவீன் என்பதும், பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே, மாணவனின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவர் ஈரோடு மாவட்டம் பவானி அம்மன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தது தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்