நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம்.. பயங்கரவாதிகளின் சதியா? - அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்

x

உதய்பூர் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல் என போலீஸ் தெரிவித்ததும் விசாரணையை பாதுகாப்பு முகமைகள் தீவிரப்படுத்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே பாலம் கடந்த ஞாயிறு அன்று வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய அம்மாநில போலீசார் உபா சட்டத்தில் வழக்கை பதிவு செய்ததுடன், இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்தனர். அங்கு தேசிய புலனாய்வு பிரிவு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் முற்றுகையிட்டு ஆதாரங்களை சேகரித்தனர். ரயில் தண்டவாளம் பிளவுப்படுத்தப்பட்டு இருந்த பகுதியில் இருந்து வயர்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநில உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொண்ட முதல்வர் அசோக் கெலாட், மாநில பயங்கரவாத தடுப்பு படை மற்றும் சிறப்பு படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணையில் தேசிய புலனாய்வு பிரிவு இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்