கோவையை உலுக்கிய பேனர் விபத்து... - நேரில் பார்த்தவர்கள் சொன்ன பரபரப்பு தகவல்

x

கோவை அருகே காற்றுடன் பெய்த மழையால் பேனர் சரிந்த விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அவிநாசி தேசிய நெடுஞ்சாலை அருகே ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்று வந்தது. 7 தொழிலாளர்கள் பணிபுரிந்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது பேனரின் சாரம் சரிந்து கீழே விழுந்ததில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், படுகாயம் அடைந்த இருவரை மருத்துவமனையில் சேர்த்தனர்


Next Story

மேலும் செய்திகள்