"கியூட் ரா எலே"..! - மாடுகளுடன் அன்ன நடை போட்டு வந்த குட்டி யானை - ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்..

x

கர்நாடகா மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளுடன் யானைக்குட்டி ஒன்று ஊருக்குள் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பூஹல்லி கிராமத்தில் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றன.

ஆனால், திரும்பி வரும் போது கூடவே குட்டி யானை ஒன்றும் அழகாக ஆடி அசைந்து மாடுகளுடன் அன்ன நடை போட்டு வந்தது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொஞ்சமும் பயம் இல்லாமல் சாதாரணமாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த யானைக்குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு குட்டியை தாய் யானையுடன் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்