கூட்டத்தில் திடீரென புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட கொடூரன்- பலியான 3 அப்பாவி பெண்கள்

x

இத்தாலி தலைநகர் ரோமில் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக 57 வயது நபர் க்ளாடியோ கேம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை குடியிருப்பு வளாகத்தை நிர்வகிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாக கைது செய்யப்பட்ட நபர் தனது வலைபக்கத்தில் ஏற்கனவே எழுதியுள்ளார்.

இந்நிலையில், குடியிருப்பாளர்கள் கூட்டத்தின் போது நிகழ்ந்த வாக்குவாதத்தில் க்ளாடியோ நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் பலியாகினர்.

மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்