திமுக ஆட்சியில் வழங்கபட்ட ஆவணத்தை வீசி எறிந்த நிர்வாகி - பரபரப்பு காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி ஒருவர், கடந்த திமுக ஆட்சியில் வழங்கபட்ட ஆவணத்தை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில், திமுக டவுன் சேர்மன் ஏ.சி.மணி பேசிக்கொண்டிருந்தபோது, எதிரில் அமர்ந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகி மோகன் எழுந்து நின்று, கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 75 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை என்று ஆவேசமாகப் பேசினார். அந்த பட்டாவை இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள், அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்