ஈரான் மசூதியில் 20 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் | Iran | Mosque

x

ஈரான் மசூதியில் 20 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

ஈரானில் ஷியா மசூதியில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான ஷா ஷெராக் மசூதி மீதான ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி, பயங்கரவாத துப்பாக்கிச் சூடுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

ஏற்கனவே ஹிஜாப் விவகாரத்தில் உயிரிழந்த இளம்பெண் மாஷா அமினியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்