ஈரான் எவின் சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

x

ஈரான் எவின் சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

ஈரான் எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தெஹ்ரானின் எவின் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கைதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு 1 மாதத்திற்கும் மேலாக ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் இந்த சிறைச்சாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கைதிகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்