ECR-ல் பயங்கர தீ விபத்து..குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய தாய்

x

கேரளாவை சேர்ந்த மஞ்சுளா என்பவர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் பல ஆண்டுகளாக ஹார்டுவர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடையின் மேல்தளத்திலே குடோனும் வைத்திருக்கும் நிலையில், அங்கு கடையில் பணிபுரியும் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் மஞ்சுளா தங்க வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட, அதிர்ச்சியடைந்த பணிப்பெண் குழந்தைகளுடன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயை போராடி அணைத்த நிலையில், தாய் உட்பட இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்