தென்காசியில் சடசடவென கொட்டும் குற்றால அருவி..

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் அருவிகளில் நீர்வரத்து காணப்படுகிறது. தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தினமும் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் இன்று காலையில் குளிப்பதற்காக மெயின் அருவிக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்