பள்ளத்தில் கவிழ்ந்த பைக் - தலைமை காவலர் உயிரிழப்பு

x

தென்காசி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தலைமை காவலர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்.

இவர் நெல்லை தச்சநல்லூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த காவலர் சுப்ரமணியன், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்