முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி...உடனே நிறைவேறிய கோரிக்கை

x

தென்காசி அருகே மூன்றாம் வகுப்பு அரசு பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று, புதிய வகுப்பறைக்கு மாவட்ட ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த ஆராதனா என்ற சிறுமி, புதிய வகுப்பறை கட்டித்தரும்படி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் கோரிக்கை அனுப்பி இருந்தார்.

இதையடுத்து புதிய கட்டடம் கட்ட முதல்வர் முதல்வர் நிதி ஒதுக்கி இருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கோரிக்கை விடுத்த மாணவியை நேரில் அழைத்து, அடிக்கல் நாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்