கூலி தொழிலாளியை ரவுண்ட் கட்டி தாக்கிய கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, கந்து வட்டி தகராறில், கூலித் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, நந்தகுமார் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
  • அதற்கு வட்டியாக வாரந்தோறும் 300 ரூபாய் கொடுத்து வந்துள்ளார்.
  • 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக வட்டிக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த நந்தகுமார், தனது உறவினர்களுடன் சேர்ந்து கூலித் தொழிலாளியை தாக்கியதில், அவர் நிலைகுலைந்தார்.
  • இந்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்