சமத்துவ பொங்கல் விழா - "தமிழ்நாடு வாழ்க" முழக்கமிட்ட மாணவிகள்

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், தனியார் செவிலியர் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவின் போது, தமிழ்நாடு வாழ்க என மாணவிகள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

ஆலங்குளத்தில் உள்ள ஆலடி அருணா செவிலியர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது, முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, பொங்கல் பானையை சுற்றி, மாணவிகள் கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.

மேலும், தமிழ்நாடு வாழ்க என உற்சாகத்துடன் மாணவிகள் முழக்கமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்