குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் - "உடலை கொண்டு வர 10 முதல் 15 நாட்களாகும்" - வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை பரபரப்பு தகவல்

x

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமரனின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து, முத்துகுமரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடைமுறையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், அவரது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற வேண்டும் என்றும் அதன் பிறகே முத்துக்குமரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

அதற்கு 10 முதல் 15 நாட்கள் வரையாகும் எனக் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை, இந்திய தூதரகம், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் மூலம் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்