துப்பாக்கிச்சுடும் போட்டி சாம்பியன் பட்டம் வென்ற தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

x

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், டிஜிபி சைலேந்திர பாபு சாம்பியன் பட்டம் வென்றார். சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சாம்பியன் பதக்கம் மற்றும் கோப்பையை வென்றார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் 2ம் இடம் பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்