"தமிழக பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டோம்" - கேரள தம்பதி அதிர்ச்சி வாக்குமூலம்

x

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள இலந்தூரில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, கேரளாவை சேர்ந்த ரோஸ்லின் ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மந்திரவாதி முகமது ஷபி, டாக்டர் தம்பதிகளான பகவல்சிங், லைலா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் அவர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

பெண்கள் 2 பேரும் நரபலி கொடுக்கப்பட்ட பின்னர், அவர்களின் உடலில் இருந்து சதைகளை வெட்டி எடுத்து சாப்பிட்டதாக கைதான லைலா தெரிவித்துள்ளார்.

மந்திரவாதி ஷபி சில புத்தங்களை கொடுத்ததாகவும், அதில் நரபலி மற்றும் இறைச்சி உண்பது போன்ற தகவல்கள் இருந்ததாகவும்,

அதன்பேரில் பத்மா, ரோஸ்லின் இருவரின் சதைகளை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

நரபலிக்கு பின்னர் பெண்கள் இருவரும் அணிந்திருந்த நகைகளை முகமது ஷபி எடுத்துக் கொண்டதாகவும்,

அந்த நகைகள் அணைத்தும் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டாவில் அடகு வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நரபலி கொடுக்கப்பட்ட பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகியோரின் உடல் பாகங்கள் 4 இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும்,

ரோஸ்லினின் சடலம் 56 துண்டுகளாகவும், பத்மாவின் உடல் 5 துண்டுகளாகவும் மீட்கப்பட்டதாகவும் விசாரணையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்