திருச்சி மாநாட்டுக்குப் பிறகு ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறிய..

x

சென்னை அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் பகுதியில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துண்டை அணிவித்து, ஓபிஎஸ் படம் கொண்ட அட்டையை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அப்போது அதிமுகவின் உறுப்பினர் படிவத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை கிழித்து எறிந்து அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஓபிஎஸ் எனக்கூறி அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாநாட்டுக்குப் பிறகு பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் மூலம் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்