"அண்ணாமலைக்கு மரியாதை கொடுக்காமல்.. அவரை பற்றி கூற நீங்கள் யார்?" - நயினார் நாகேந்திரனுக்கு சூர்யா சிவா கேள்வி

x
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடைய கருத்து தனிப்பட்ட முடிவு என்று பேசக்கூடிய அளவுக்கு நீங்கள் யார்?, என்று, அக்கட்சி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு, திருச்சி சூர்யா, காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்

. திமுக அமைச்சர்களிடம் காரியத்திற்காக போய் மண்டி போட்டுக் கொண்டு ஜாதியின் அடிப்படையில் உறவு வைத்துக் கொண்டு, மாநில தலைவர் அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பதாக, தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு நீங்கள் செய்யக் கூடிய செயல் ஊரறிந்தது எனவும், முக்குலத்தோர் எதிர்ப்பை தலைவருக்கு எதிராக உருவாக்க விரும்புகிறீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். .


Next Story

மேலும் செய்திகள்