கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம் - விவசாயிகள் மகிழ்ச்சி

x

தஞ்சையில் கோடை நெல் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டு கல்லணைக்கு நீர் வந்தடைந்தது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெற்றுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பயோ மெட்ரிக் கருவி பொருத்தி, விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம், நெல் வியாபாரிகள் உள்ளே நுழையாமல் தடுக்கப்படுவதுடன், நெல்லை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்