திடீரென உருண்டு விழுந்த பாறை.. நசுங்கிய 2 கார்கள்.. பயங்கர காட்சி

x

நாகாலாந்து மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பாறை விழுந்து ஒருவர் உயிரிழந்தார். திமாபூர் மாவட்டம் சுமுகெடிமா பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையிலேயே சிக்கிக் கொண்டன. அப்போது, பாறைகள் உருண்டு வந்து விழுந்ததில் சாலையில் இருந்த வாகனங்கள் சேதமாகின. இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனிடையே விபத்து தொடர்பாக வீடியோ வெளியாக காண்போரை பதற வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்