திடீரென 'தீ' பற்றி எரிந்த சிலிண்டர்..! துளியும் பதறாமல் தர தரவென இழுத்து வந்த அதிகாரி

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தேநீர் கடையில் பற்றி எரிந்த சிலிண்டரை சாதுர்யமாக இழுத்து சென்ற தீயணைப்பு அலுவலர் சந்திரசேகரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாக்குப்பையை தண்ணீரில் நினைத்து நெருப்பு பற்றி எரிந்த சிலிண்டரை வெளியே இழுத்து வந்த அலுவலர், சிறிது தூரத்தில் இருந்து சாக்கடையில் தள்ளிவிட்டார். இதனால், அங்கு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவசர காலத்தில் துணிந்து பணியாற்றிய தீயணைப்பு அலுவலரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்


Next Story

மேலும் செய்திகள்