சாலையில் திடீரென பற்றி எரிந்த கார் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து காரிமங்கலம் செல்லும் வழியில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சென்று தீயை அணைத்தாலும், கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்