திடீரென கரை ஒதுங்கிய பிரம்மாண்ட உருளை... பீதியடைந்த மக்கள்... மயிலாடுதுறை அருகே பரபரப்பு...

x

வானகிரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பிரம்மாண்ட உருளை, தனியார் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரம்மாண்ட உருளை ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து கடலோர ஆய்வு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த உருளை சென்னையைச் சேர்ந்த தனியார் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக நிலை தடுமாறி இப்பகுதியில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்