பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் பலி..கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ்.. வாகனங்கள் மீது மோதி கோரம்

x

மத்திய பிரதேசத்தில், ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், நிலைத்தடுமாறி வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ஜபால்பூரில், சிக்னல் அருகே அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநர் ஹர்தேவ் பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், முன்னே சென்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநரும், ஆட்டோவில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்