குளிக்கும் போது திடீர் ஹார்ட் அட்டாக்... நீச்சல் குளத்திலேயே பிரிந்த உயிர்

x

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 37 வயதான பாபு தாமஸ் என்பவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன.

அவரது குடும்பம் எர்ணாகுளத்தில் உள்ள நிலையில், பாபு தாமஸ் திருச்சி என்.ஐ.டி கல்லூரி குடியிருப்பில் தங்கி, எலக்ட்ரானிக் பிரிவில் பிஎச்டி படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது, மாரடைப்பு காரணமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்