சதுரகிரியில் திடீரென பற்றிய காட்டுத்தீ - ஆடி அமாவாசைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி

x

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை பகுதியில், பயங்கர காட்டுத் தீ 15 மணி நேரப் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.

சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் நாவல் ஊத்து பகுதியில், பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 15 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மலை மீதுள்ள கோயிலுக்குள் இருக்கும் பக்தர்களை கீழே அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்