மணிப்பூரில் திடீர் துப்பாக்கிச்சூடு - 2 வீரர்கள் நேர்ந்த கதி | Manipur

x

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மேற்கு இம்பால் மாவட்டம், போல்ஜங் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் இன்று காலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 வீரர்கள் லேசான காயமடைந்ததாகவும், அவர்கள் இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தேடுதல் வேட்டையில் ஒரு இயந்திரத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்