பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து..."இருவருக்கு 80 % தீக்காயம்..." - விருதுநகரில் பரபரப்பு

x

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை முத்துப்பாண்டி, கருப்பசாமி என்ற இரண்டு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்