திடீரென பரவும் காய்ச்சல் - ஒரே நாளில் 1000 பேருக்கு நேர்ந்த கதி

x

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. கடலூர் மாவட்டத்தில் பகலில் அதிக வெப்பமும், இரவில் மழையும் மாறி மாறி வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்த புறநோயாளிகள், மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர். இன்று காலை மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதனிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்