பேருந்தில் பாட்டுபாடிய மாணவர்கள்...பேருந்தை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர்...

x

ட்ரெனில் ஃபுட் ஃபோர்ட் அடித்த படி கத்தியை வைத்து பதற வைத்த மாணவர்கள்.. எம் டி சி பஸ்ஸுக்கு மாவிலை தோரணம் கட்டியது போல நாலா புறமும் தொங்கிக் கொண்டு செல்லும் ரூட்டு தலையின் சிஷ்ய பிள்ளைகள். இப்படியான செய்திகளுக்கு சில மாதங்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது.. வேலைக்குச் செல்லும் பயணிகளும் , ஓட்டுநர் நடத்துநர்களும் கொஞ்சம் மன நிம்மதியோடு வேலை பார்த்து வந்தனர்.. ஆனால் நேற்று கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் நாளே தங்களது வானர சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் சில மாணவர்கள்.இந்த வருடத்தில் புள்ளிங்கோகளுக்கு முதல் பலியான பேருந்து 41d . கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் தங்க்கள் extracurricular activities-களை பேருந்தில் காட்டியதால், பஸ் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அம்பத்தூரிலிருந்து மந்தவவெளி வரை இயக்கப்படும் இந்த பேருந்து . நேற்றுகாலை அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி இருக்கிறது. அப்போது கும்பலாக்க வந்து ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே கூச்சல் இட்டபடியே, குதுகலமாக பயணித்திருக்கிறார்கள். காட்டு கத்து கத்திக் கொண்டிருந்தவர்களைக் கண்டு எரிச்சலான பேருந்து பயணிகள் மாணவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறார்கள். அட்ராசிட்டி செய்த கல்லூரி மாணவர்கள், அடுத்த கட்டமாகப் பேருந்திலேயே இன்னிசை கச்சேரியை ஆரம்பித்திருக்கிறார்கள். கோரஸாக பாட்டுப் பாடிக் கொண்டு வந்தவர்கள், பயணிகள் சீட்டின் பின்பக்கத்தில் தாளம் போட்டு ட்ரம்ஸ் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். முன்னாடி உட்கார்ந்திருந்தவரின் முதுகில் தபேலா வாசித்தால் சும்மா விடுவாரா கண்டக்டர்?மாணவர்களைக் கண்டித்து அமைதியாக வருமாறு அறிவுரை கூறி இருக்கிறார். ஆனால் உச்சஸ்தாயியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கும்பல் அவரை அவதூறாகப் பேசி இருக்கிறது.வெகு நேரமாக பொறுமை காத்த ஓட்டுநர் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி இருக்கிறார்.

உடனே அங்கு வந்த போக்குவரத்து காவலர் ஓட்டுநரை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர்கள் கீழே இறங்காமல் பேருந்து ஒரு அடி நகராது என அடம்பிடித்திருக்கிறார் ஓட்டுநர். இவை அனைத்திற்கும் காரணமான பச்சையப்பாஸ் புள்ளிங்கோ போலீசாரை கேலி செய்ததோடு, பேருந்தில் இருந்த பெண்களையும் ஆபாசமாக திட்டி இருக்கிறது. கடைசியாக ஓட்டுநரை சமாதானம் செய்த போலீசார் பேருந்தை அங்கிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.இது போன்ற அட்ராசிட்டியில் சிக்கி சின்னாபின்னமாகி, ஆஃபிசுக்கு போய் வருவது பேருந்து பயணிகளுக்குத் தான் நரக வேதனையாக இருக்கிறது என்றால்..ரயில் பயணிகளையும் அலற விட்டிருக்கிறது ஒரு புள்ளிங்கோ குரூப்ஸ்.

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் அது. இரவு நேரத்தில் ரயிலில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் இளைஞர்களின் வீடியோ காட்சிகள் இது. வேளச்சேரியில் இருந்து கிளம்பி கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், சில இளைஞர்கள் ஃபுட் போரெட் அடித்த படியே பயணித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்ரயிலின் மேலே ஏறிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். இதனை அங்கிருந்த சில பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ரயிலிலிருந்த பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்த காணொளிகள் இணையத்தில் பரவியதை அடுத்து இந்த கும்பல் யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.அன்றாடம் வேலைக்காகவும், தேவைக்காகவும் பேருந்துகளிலும் ரயில்களிலும் கட்டப்பாடுபட்டு பயணிப்பவர்கள் ஏராளம். அவர்களுக்கு மேலும் துன்பம் கொடுக்கும் இது போன்ற கும்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்