"யார் தெரியுமா.. எனக்கே டிக்கெட்டா?" - கண்டக்டரை அடித்து மாணவர் அட்ராசிட்டி

x

சிவகங்கை அருகே பயண சீட்டு எடுக்க சொன்னதால் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மதுரையிலிருந்து காரைக்குடி வழியாக அறந்தாங்கி சென்ற பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர் பூமிராஜா டிக்கெட் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நடத்துநர் படிக்காசு அவரை டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த பூமிராஜா நடத்துனரை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்