சிறுமிகளை கடித்த தெருநாய்கள்..பிடிக்க வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் "ரவுடியா நீ" என சண்டைக்கு வந்த இளைஞர் - வெளியான பரபரப்பு வீடியோ

x

மதுரையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் நாய்களை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது. மதுரை சிம்மக்கல் பகுதியில் இரண்டு சிறுமிகளை தெரு நாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் பகுதிக்கு சென்றனர். அப்போது, 5க்கும் மேற்பட்ட தெருநாய்களை இளைஞர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் இளைஞர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்