"உடனடியாக தடுத்து நிறுத்துக" - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

x

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 72 கோடிக்கு 2.19 கோடி கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், ஒரு கரும்பு 15 ரூபாயில் இருந்து 18 ரூபாய் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, கரும்பு கொள்முதலில் உள்ள முறைகேடுகளை உடனே களைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு அறிவித்தப்படி ஒரு கரும்புக்கு 33 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்