குற்றாலம் ஹோட்டல்களில் கெட்டுப்போன சிக்கன்... சோதனையில் பகீர்... பீதியில் மக்கள்

x

குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், குற்றாலம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் இன்று நடத்திய ஆய்வில், ஒரு ஹோட்டலில் கெட்டுபோன 35 கிலோ சிக்கன் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் முந்தைய நாளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான உணவுப்பொருள்களும் கண்டறியப்பட்டு அவை மொத்தமாக அழிக்கப்பட்டது. மேலும் பல ஹோட்டல்களில் இதே போன்று சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்