13 நிமிடத்தில் 31 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News|(27.03.2023)

x

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதற்காகவே அவரது எம்பி பதவியை பறித்து இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

  • மேலும், உண்மை வெளிப்படும் என்பதாலேயே அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


  • சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிரிக்கா உலக சாதனை படைத்துள்ளது. செஞ்சூரியன் நகரில் நடந்த 2வது டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா அணி, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி சாதனை படைத்தது.
  • இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.


  • ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். சுமார்12 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதியை கடந்து சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


  • கேரள மாநிலம் கொச்சியில் பயிற்சிக்கிடையே கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்