சிறப்பு எஸ்ஐ பார்த்திபன் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை - குற்றாலத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டம் குற்றாலம் பழைய குற்றாலம் அருகிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தங்கி உள்ளார். இவருக்கு பாதுகாப்பு பணிக்காக சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியில் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உறுதி பணியாளர்கள் சென்று பார்க்கும் போது அங்கு பார்த்திபன் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த தங்கும் விடுதி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தற்போது வரை பார்த்திபனின் உடல் விடுவிக்குள்ளையே இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்