தாய்க்கு உதவ முன் வந்த மகன்... கண்முன்னே தூக்கி வீசப்பட்டு பலி- ஈரோட்டில் சோகம்

x

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தாய் கண் முன்னே சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புளியங்கோம்பை பகுதியைச் சேர்ந்த மாணவர் பிரவீன், 7ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி செல்லும் நேரம் போக, தாயாருக்கு உதவியாக மளிகை கடையில் வேலை செய்துவந்த இவர், வழக்கம்போல் கடையை திறந்து மின் சுவிட்சை தொட்டபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்