சொத்துக்காக அம்மா, அப்பாவை அரிவாளால் கொடூரமாக வெட்டிய மகன்

x

சொத்துக்காக தாய், தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வசிக்கும் ரத்தினசாமி, புஷ்பாவதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். முதல் மகன் தணிகைவேல் என்பவர், பாகப்பிரிவினை செய்யாத சொத்தின் மூலம் வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த நிலையில், தணிகைவேல் தனது மனைவியுடன் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் தணிகைவேல் தனது பெற்றோரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த பெற்றோர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மகன் தணிகைவேலுவை கைது செய்த நிலையில், அவரது மனைவியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்