சிசிடிவி கேமரா பொருத்தியதால் ஆத்திரம் - இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்

x

சிசிடிவி கேமரா பொருத்தியதால் ஆத்திரம் - இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்


கோட்டக்குப்பம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்திய நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் பக்ருதீன் என்பவர் போலீசாரிடம் அனுமதிபெற்று தான் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அஜித்ராஜ், அகமது அசேன், முகமது ஷாஜகான் ஆகியோர் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து பக்ருதீன் போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் தென்னரசு என்பவருடன் இணைந்து பக்ருதீனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பக்ருதீன் சிகிச்சைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்